search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் கொப்பரை"

    • தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் நிலக்கடலை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • தொடர்ந்து இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இம்மையத்தில் நிலக்கடலைக்கான பொது ஏலம் தொடங்கியுள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி - ஓமலூர் பிரதான சாலையில் கொங்கணா புரத்தை அடுத்த கரட்டுகாடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் நிலக்கடலை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.8,188 முதல் ரூ.8,690 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.5,825 முதல் ரூ.8010 வரை விலை போனது. இரு முறை நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 80 குவிண்டால் அளவிலான தேங்காய் கொப்பரைகள் விற்பனையானது.

    தொடர்ந்து இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இம்மையத்தில் நிலக்கடலைக்கான பொது ஏலம் தொடங்கியுள்ளது. இதனை சுற்றுப்புற விவசாயிகள் பயன்படுத்தி தாங்கள் விளைவித்த நிலக்கட லையை எந்தவித கமிஷன் மற்றும் மறைமுக கட்டணம் ஏதுமின்றி விற்பனை செய்திகொள்ளுமாறு வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது.
    • இந்த ஏலத்தில் மக்காசோளம் மற்றும் தேங்காய் கொப்பரை மொத்தம் ரூ.7.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது. 264 மூட்டைகளில் 26.379 டன் மக்காசோளம், 56 மூட்டைகளில் 2.04 டன் தேங்காய் கொப்பரை விற்பனைக்கு வந்தது. ஒரு குவிண்டால் மக்காசோளம் அதிகபட்சம் ரூ.2245-க்கும் குறைந்தபட்சம் ரூ.2237-க்கும் விற்பனையானது. தேங்காய் கொப்பரை ஒரு கிலோ அதிகபட்சம் ரூ.87.77-க்கும், குறைந்தபட்சம் ரூ.58.75-க்கும் விற்பனையானது.

    இந்த ஏலத்தில் மக்காசோளம் மற்றும் தேங்காய் கொப்பரை மொத்தம் ரூ.7.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. தேங்காய் கொப்பரை விலை உயர்ந்து வருவதால் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து தரகர் இல்லாமல் விவசாயிகள் விற்பனை செய்து முழு தொகையினை பெறலாம். மேலும் ரூ. 3 லட்சம் வரை பொருளீட்டுக்கடன் கடன் பெறலாமென, ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர் பிரபாவதி தெரிவித்துள்ளார். 

    • சங்க உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது.
    • சங்கத்தின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும், தொழில் முன்னேற்றம் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க கூடாரங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே.பி.சண்முகம் தலைமை தாங்கினார். சங்கத்தின்கவுரவ ஆலோசகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலை வகித்தார்.

    இதில் சங்கத்தின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும், தொழில் முன்னேற்றம் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் ஜி.எஸ்.கவுரிசங்கர், பொருளாளர் ஏ.டி.சி.பழனிச்சாமி, காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால், செயலாளர் கங்கா எஸ்.சக்திவேல், பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் உள்பட சங்கத்தின் கவுரவ ஆலோசகர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய தங்களது பெயர்களை பதிவு செய்திடலாம்.
    • கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    விளைபொருளின் விலை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ் செல்லும் போது, ஆதார விலை திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் நேரடி கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தற்போது தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாத்து, விவசாயி களின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திடும் பொருட்டு விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரை எளிதில் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் 75 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை ஆதார விலைத் திட்டத்தில் கொள்முதல் செய்திட அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசினால் 2023-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான கொப்பரைக்கு கிலோ ரூ.108.60 என்ற விலையில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை அரவைக் விற்பனை கூடத்தில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கொள்முதல் செய்யப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் விற்பனைக்கூட பொறுப்பாளரை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்திடலாம். பெயர்களை பதிவு செய்யும் போது, நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான நாபெட் நிறுவனம் பரிந்து ரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் விளைபொருள் இருத்தல் அவசியமாகும். விவசாயிகள் தரத்தினை உறுதி செய்து குறைந்தபட்ச ஆதார விலை பெற்றிடலாம்.

    தமிழகத்தில் கொப்பரை கொள்முதலுக்கு தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மாநில முகமையாக செயல்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் தேங்காய் கொப்பரைக்கான தொகையினை விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்திட அனைத்து நடவடிக்கை களையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

    சேமிப்பு கிடங்குகளில் கொப்பரை குவியல்கள் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் அதற்குரிய தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

    தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    தற்பொழுது தேங்காய் கொப்பரையின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 550 மெ.டன் அரவை கொப்பரையும், அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 550 மெ.டன் அரவை கொப்பரையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    எனவே இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் கொப்பரைக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    கொப்பரை 27 மூட்டைகள் வரத்து இருந்தது. எடை 921 கிலோ. விலை கிலோ ரூ.65.10 முதல் ரூ.107.15 வரை விற்பனையானது.
    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.25 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.முத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர்.

    3,673 தேங்காய்கள் வரத்து இருந்தது. எடை 1,213 கிலோ. கிலோ ரூ.27.50 முதல் ரூ.32.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.30.85. விற்பனைத் தொகை ரூ.37 ஆயிரத்து 309.

    கொப்பரை 27 மூட்டைகள் வரத்து இருந்தது. எடை 921 கிலோ. விலை கிலோ ரூ.65.10 முதல் ரூ.107.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.98.35. விற்பனைத் தொகை ரூ.86 ஆயிரத்து 153. 40 விவசாயிகள், 11 வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். 

    தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 2.25 டன் வரத்து இருந்தது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.23 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார்.
    ×